பொன்னமராவதி, ஏப்.7: பொன்னமராவதி அருகே ரூ.30ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. பொன்னமராவதி அருகே நல்லூர் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயி. இவரது வீட்டின் அருகில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலாயின. மேலும் அருகில் இருந்த வைக்கோல்போர் மீது தீ பரவாமல் தடுத்து காப்பாற்றப்பட்டது. மழையின்றி மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசமானாதால் விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர்.