நாகை, ஏப்.5: நாகை நாடாளுமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் வேளாங்கண்ணி பேரூர் மற்றும் கீழையூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.
வேளாங்கண்ணி பேரூரில் உள்ள அனைத்து வார்டுகள் மற்றும் கீழையூர் ஒன்றியம் செருதூர், பிரதாபமராமபுரம்,திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, தாதன்திருவாசல், முதலியப்பன்கண்டி, கடையன்கோட்டகம், காரப்பிடாகை, சிந்தாமணி, கீழப்பிடாகை, திருப்பூண்டி, மகிழி, தலையாமழை, பொரியதுமபூர், கிராமத்துமேடு, ஆலமழை, வேப்பஞ்சேரி, பாலக்குறிச்சி, இறையான்குடி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது நாகை மக்களை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் பேசுகையில், காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவேன். விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த குரல் கொடுப்பேன்.
இவ்வாறு பேசினார்.