×

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஏப்.5:தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, துடிசியா தலைவர் நேருபிரகாஷ், பொருளாளர் சந்திரமோகன் ஆகியோர் அளித்த பேட்டி:கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை (6ம்தேதி) வஉசி கல்லூரியும், துடிசியா எனப்படும் மாவட்ட சிறுதொழில் சங்கமும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பளிக்கும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. குறிப்பாக தூத்துக்குடியில் இயங்கிவரும், ரிலையன்ஸ், ஜியோ, நிலாசீபுட்ஸ், அக்சார், ஆச்சிமசாலா மற்றும்  தேசிய அளவிலான நிறுவனங்களின் தூத்துக்குடி கிளைகள் என சுமார் 30க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்கின்றன. மெகா ப்ளேஸ்மென்ட் ட்ரைவ் என பெயரிடப்பட்ட இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதற்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த முகாமில்  பிஏ, பிஎஸ்சி, பிகாம், எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் போன்ற தகுதியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். வஉசி கல்லூரி மற்றும் ஏபிசிவி மகாலட்சுமி மகளிர் கல்லூரியை சேர்ந்த 1500 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் 300க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். கல்லூரியின் வேலைவாய்ப்பு துறைத்தலைவர் எம்.என்.சோரீஸ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Tags : Private Job Camps ,VU College ,
× RELATED தூத்துக்குடி வஉசி கல்லூரியில்...