×

கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதியில் அமமுக வேட்பாளர் சாருபாலா வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு





கந்தர்வகோட்டை, ஏப்.5: திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டையான் நேற்று கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம், வௌ்ளை முனியன் கோயில் திடல், முஸ்லிம் தெரு மற்றும் அரவம்பட்டி, வடுகப்பட்டி, மங்கனூர், கோமாபுரம், கள்ளிப்பட்டி , விராலிப்பட்டி, நத்தமாடிபட்டி, சோழகம்பட்டி, குரும்பூண்டி, நாட்டாணி, செவரியார்பட்டி மற்றும் தச்சங்குறிச்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாரம்பரியமான மன்னர் குடும்பத்தை சேர்ந்த எனக்கு பரிசு பெட்டக சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் செங்கொடியான், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,Gandharvatai ,Samarapala Street ,polling station ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்