×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஏப்.4: சேந்தமங்கலத்தில் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் பண்டிகையையொட்டி புதன்சந்தையில் ஆடுகள் விலை அதிகரித்தது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில், புதன்கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் கூடுவது வழக்கம். சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடாக்கள் விற்பனைக்கு வரும். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். வறட்சி தொடங்கிய நிலையில், நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் மாரியம்மன் பண்டிகை நடந்து வருவதால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு ₹4,800க்கு விற்பனையானது. இந்த வாரம் ₹4,900க்கு விற்பனையானது. கடந்த வாரம் ₹3,900க்கு விற்பனையான ஆடுகள் இந்த வாரம் ₹4 ஆயிரத்துக்கு விற்றது. பிறந்து ஒருமாதமே ஆன பெண்குட்டி ஆடு ₹1000க்கும், கிடாகுட்டி ₹1000க்கும் விற்பனையானது.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு