×

வாகன சோதனையில் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

தர்மபுரி, ஏப்.4: நல்லம்பள்ளி அருகே ஏலகிரியில், தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த ேபாலீஸ் எஸ்ஐ பெரியண்ணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், 200 டெட்டனேட்டர் மற்றும் 200 ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றை ஆழப்படுத்த கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த போது முறையாக இருந்தது. இருந்த ேபாதும் சந்தேகத்தின் ேபரில் பிடிபட்ட நபர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Detonator ,
× RELATED லாக்காடு கேப் சாலையில் டெட்டனேட்டர்...