×

சங்கரன்கோவிலில் தனுஷ்குமாரை ஆதரித்து பிரசாரம் முரண்பாடுகளின் ெமாத்த உருவம் இபிஎஸ், ஓபிஎஸ்

சங்கரன்கோவில், ஏப். 4:  முரண்பாடுகளின் மொத்த உருவம் இபிஎஸ், ஓபிஎஸ் என தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: அதிமுக தற்போது ஆளுமை இல்லாத கட்சியாக உள்ளது. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மோடியை டாடி என்றும், ஸ்டன்ட் மாஸ்டர் என்றும் புகழாரம் சூட்டுகின்றனர். இன்று தென் மாவட்டங்களில் 4 தொகுதிகளை பாஜ மற்றும் கூட்டணியினருக்கு அதிமுக தாரை வார்த்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மகனுக்கும், ராஜன் செல்லப்பா மகனுக்கும் சீட்டு கொடுத்து விட்டு மற்ற நிர்வாகிகளை ஏமாற்றி விட்டனர். அதிமுக ஆட்சியின் மீது பல ஊழல் புகார்கள் தெரிவித்து தமிழக கவர்னரிடம் மனு அளித்த ராமதாஸ், அன்புமணிக்கு 7 தொகுதிகளை கொடுத்து இருக்கின்றனர்.

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சுக்கு ஆதரவளித்த 11 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், டிடிவி தினகரன் தலைமையிலான 18 பேர் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்த அரசு வேண்டாம் என்றுதான் கூறினார்கள். ஆனால் அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அரசு கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை? இப்படிதான் மொத்த முரண்பாடுகளின் உருவமாக இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர். இதனால்தான் நான் திமுக தலைமைக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்து வருகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு பயனுள்ள நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பழைய நினைவுகளை நினைத்து பார்த்து பேச வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. திமுக தலைமையில் மட்டும்தான் மதசார்பற்ற தன்மை உள்ளது. திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

 பொதுக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாநில திமுக நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாவட்ட அமைப்பாளர் அரசன்ராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் முத்துபாண்டியன், விவசாய தொழிலாளர் அணி துணை  அமைப்பாளர் தாழை கே.ஆர்.ராஜூ, கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் தவசிராஜன், தச்சை பாலு, இசக்கி, ஆவின் கல்யாணி, எல்ஐசி  பேச்சிமுத்து, வலரி தங்கம் விடுதலைசிறுத்தைகள் பீர்மைதீன், வட்டார யாதவ அபிவிருத்தி சங்க தலைவர் முருகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : OPS ,Dhanushkumar ,Sankarankoil ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்