×

இரவோடு இரவாக ரகசியமாக அமைத்த கூட்டணி அல்ல மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை, மார்ச் 29: இரவோடு இரவாக ரகசியமாக அமைத்த கூட்டணி அல்ல. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி என்று நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் கூறினார்.  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னதாக புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

முதன்முதலில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி என்று அறிவித்தவர் ஸ்டாலின். அதே மேடையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இந்த கூட்டணி இரவோடு இரவாக ரகசியமாக அமைந்த கூட்டணி அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் மகத்தான கூட்டணியாகும் இவ்வாறு அவர் கூறினார்.


Tags : coalition ,Candidate ,Thirunavukkar ,
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...