×

அமைச்சர், மாவட்ட செயலாளர் மோதல் எதிரொலி பொள்ளாச்சி ஜெயராமன் பெயர் அதிமுக விளம்பரங்களில் இல்லை

உடுமலை,  மார்ச் 29: திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக., செயலாளராக இருந்த அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்து, மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு,  சமீபத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் வழங்கப்பட்டது. இதற்கு  அமைச்சரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலிடத்துக்கு  புகார் தெரிவித்தனர்.ஆனாலும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை.இதனால்,  திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்களின்  ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சி  ஜெயராமன் நடத்தும் கூட்டங்களுக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் செல்வதில்லை.  அமைச்சரின் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வருவதில்லை என்ற நிலை  நீடிக்கிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக  வேட்பாளர் மகேந்திரன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தேர்தல்  பிரசாரத்தில், அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கோஷ்டி பூசல்  வெளிப்படையாக தெரிந்தது. போடிப்பட்டி கிராமத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள்  சார்பில், பிரசார பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், மாவட்ட செயலாளர்  பொள்ளாச்சி ஜெயராமன் பெயரோ, படமோ இடம்பெறவில்லை. அமைச்சரின் பெயர் மட்டும்  இடம் பெற்றுள்ளது.
கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிமுக தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Minister ,Pollachi Jayaraman ,AI ,
× RELATED காரைக்கால் என்.ஐ.டியில் மருத்துவ...