×

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கிரிவலப் பாதையில் நிழற்குடைகள் அமைக்கப்படும் விருதுநகர் தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குறுதி

விருதுநகர், மார்ச் 29: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் பேசுகையில், ‘திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஆங்காங்கே நிழற்குடைகள் அமைக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகை பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமங்கலம் வழியாக செல்லும் ரயில் தடத்தில் மேம்பாலம் இல்லாததால் மக்கள் ரயில்வே கேட்டில் காத்துக்கிடக்கும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்’ என்றார். செயல் வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஏராளமான அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruparankundram Murugan ,road ,Giravela ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி