×

நெல்லை அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் பேச்சு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

நெல்லை, மார்ச் 29:  ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன், நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திசையன்விளை அடுத்த முதுமொத்தன்மொழியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் துவக்கினார். தொடர்ந்து ஆனைகுடி, இடையன்குடி, ஜார்ஜ் நகர், குட்டம், கூடுதாழை, உவரி, குண்டல், நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், கூத்தன்குழி, விஜயாபதி, இடிந்தகரை பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.மதியம் கூடங்குளத்தில் மனோஜ்பாண்டியன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த தேர்தல் மக்களவைக்கானது. உங்கள் குரலை டெல்லியில் ஒலிக்க செய்ய, என்னை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தபோது நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளேன். கூடங்குளம் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடுபடுவேன். வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவேன், என்றார். வேட்பாளருடன் இன்பதுரை எம்எல்ஏ, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணிஅமலராஜா, முன்னாள் ெதாகுதி செயலாளர் பால்துரை, பாஜ கனிஅமுதா, பால்சாமி, பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் லாரன்ஸ், வக்கீல் பழனிசங்கர், தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின்டாஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Manojpandian ,
× RELATED கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு