நாகர்கோவில், மார்ச் 29: பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு விஷ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜ வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் பல்வேறு கட்சிகள், அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் பல்வேறு அமைப்பினர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு விஷ்வ கர்ம கைவினைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சண்முகநாதன் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி குமரி மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் முத்துசாமி, அமைப்பு செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் முத்து, நாராயணன், சரஸ்வதி, உஷா, இசக்கி, ஈஸ்வரமூர்த்தி, ஆறுமுக கணேஷ், ஐயப்பன், குருநாதன், ஐயப்பன் ஆகியோர் நேற்று காலை பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.