×

சிவிஜில் மொபைல் செயலி விழிப்புணர்வு முகாம்

அரியலூர், மார்ச் 28: அரியலூர் அரசு கல்லூரியில் சிவிஜில் மொபைல் செயலி விழிப்புணர்வு முகாம் நடந்தது.தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதியை மீறும் நடவடிக்கைகளை பொதுமக்களும் கண்காணித்து தேர்தல் நடத்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு சிவிஜில் மூலம் போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்ப தக்கவகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மொபைல் செயலியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அனுப்பும் பொதுமக்கள் தங்களை பற்றிய விபரங்களை தெரிவிக்காமலும் தங்களது தொலைபேசி எண்ணை செயலியில் பதிவிட்டும் புகார் அளிக்கதக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்களால் அனுப்பப்படும் புகார் சிவிஜில் மூலமாக பெறப்பட்டவுடன் அதை உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அலுவலர் பறக்கும் படை அல்லது கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி புகாரின் மீது 100 வினாடிகளில் நடவடிக்கை எடுத்து புகார் அளித்த பொதுமக்களுக்கு புகாரின் முடிவை தெரிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அனுப்பிய பொதுமக்களின் விபரம் பாதுகாக்கப்படும்.இந்நிலையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு சிவிஜில் மொபைல் செயலி விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கோமதி தலைமை வகித்தார். துணை பதிவாளர் செல்வராஜ், கல்லூரி என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் மற்றும் பேராசிரியர் செல்வமணி பங்கேற்றனர். முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : CVG ,Camp ,
× RELATED தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை