×

பெரியநாயக்கன் பாளையத்தில் நள்ளிரவில் மது விற்பனை டாஸ்மாக் பாரில் 284 மது பாட்டில்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை கோவை,

மார்ச்.28: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பாரில் இருந்து 284 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. அதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.  அவர்கள் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் பெரியநாயக்கன் பாளையம் கோட்டை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் பாரில் தேர்தல் விதிமுறையை மீறி சட்டவிரோதமாக இரவு 10 மணிக்கு மேல் மது விற்றது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் டாஸ்மாக் பாரில் இருந்த 284 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Tags : bar ,Taskmak ,
× RELATED உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக...