×

சாத்தூர் அருகே கள்ளக்காதலியின் தாயை வெட்டி கொலை செய்த கள்ளக்காதலன்

சாத்தூர், மார்ச் 28: சாத்தூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிட சொன்ன கள்ளக்காதலின் தாயை கள்ளக்காதலன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சாத்தூர் அருகே வேப்பலைபட்டியை சேர்ந்தவர் பெரியசந்தானம்(55). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் மின்னல்கொடிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக பெரியசந்தானம் மனைவி, மின்னல் கொடி வீட்டிற்கு சென்று சண்டையிட்டு வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு மின்னல் கொடிவீட்டிற்கு பெரியசந்தானம் வந்தார். அப்போது, ‘இனிமேல் இங்கு வர வேண்டாம்’ என்று மின்னல்கொடி கூறியதாக ெதரிகிறது. உடனே அங்கிருந்த சென்ற பெரியசந்தானம் குடிபோதையில் மீண்டும் மின்னல்கொடி வீட்டிற்கு வந்தார். அப்போது மின்னல்கொடி தாய் சுப்புதாய்(70) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பெரியசந்தானத்தை பார்த்த சுப்புதாய் அவரை கண்டித்துள்ளார். வீட்டிற்கு வரக்கூடாது என தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த பெரியசந்தானம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சுப்புதாயை வெட்டிவிட்டு அவரை இழுத்துச் சென்று அருகில் இருந்த வைக்கோல் படப்பில் போட்டுவிட்டு தப்பிவிட்டார்.
நேற்று காலை அந்த பக்கம் சென்றவர்கள் சுப்புதாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது குறித்து அப்பயம்நாயக்கன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் சுப்புதாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பெரியசந்தானம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Kallakadalan ,Sattur ,Kallakadali ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது