ஆறுமுகநேரி, மார்ச்27: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் வனிதா ராயர் முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும் தஞ்சாவூர் அணு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி காதர்பாட்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் பிரிவு மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் (பொ) ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார். விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.