×

வேம்பார் கல்லூரியில் பிரிவுபசார விழா

குளத்தூர், மார்ச் 27: குளத்தூர் அருகே உள்ள வேம்பார் தேவநேசம் இருதயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பிரிவுபசார விழா நடந்தது. இயந்திரவியல் விரிவுரையாளர் ராஜேஸ் ஜெபம் செய்து துவக்கிவைத்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெர்த்தின் ஐசக்ராஜ் வேதம் வாசித்தார். எலக்ட்ரிக்கல் இரண்டாமாண்டு மாணவர் அந்தோணி டேனியல் வரவேற்று பேசினார். மூன்றாமாண்டு மாணவர்கள் தங்கபுஷ்பம், அந்தோணி ராபர்ட், ரோசாரியோ டேவிட், அரவிந்த், மரிய உத்தம இன்பம், முத்துஜோதி ஆகியோர் இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு மாணவர்களுடன் கல்லூரி நாட்களில் நடந்த தங்களது அனுபவங்கள் குறித்து பேசினர். கல்லூரி முதல்வர் ஜீவானந்தம், துணை முதல்வர் கிருபாகரன்ஜோசப், நிர்வாக அதிகாரி டுனோமின் ஆகியோர் பேசினர். ஆசிரியர் ஜெபசேகர் ராஜன், மாணவர் முருகேசன் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags : ceremony ,Vembar College ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...