×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி

க.பரமத்தி, மார்ச் 26: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70), இவர் தென்னிலை அருகே தனியார் குவாரி கிரஷரில் காவலாளியாக  பணியாற்றி வந்துள்ளார்.  இவர் இரவு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...