×

பைக் விபத்தில் வாலிபர் பலி

நெய்வேலி, மார்ச் 26:  நெய்வேலி என்எல்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தமிழ்ச்செல்வன் (32). கடந்த 10ம் தேதி எட்டுரோடு ரவுண்டானா அருகே பைக்கில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் செந்தமிழ்ச்செல்வன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் செந்தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தம்பி அருமைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : guy ,bike accident ,
× RELATED ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்