அண்ணாநகர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோயம்பட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘எதிர்காலத்தை தீர்மானிப்போம் வாக்களிப்போம்’’ என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சில் கல்லூரி முதல்வர் தங்கவேல், கோயம்பேடு உதவி கமிஷனர் ஜெயராமன், மண்டல அலுவலர் நட்ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், அண்ணாதுரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.