×

ஏலாக்குறிச்சி பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


அரியலூர்,மார்ச் 21: ஏலாக்குறிச்சி பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியது. அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழவரப்பன்குறிச்சி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். ஓன்றியகுழு ஆரோக்கியநாதன், மற்றும் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சகாயமேரி வரவேற்றார் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் பணி குறித்தும், கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச்செய்வது குறித்தும், பேசப்பட்டது.மேலவரப்பன்குறிச்சி புதுகாலனி தெருவில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா அரசு வழங்க வேண்டும் எனவும், அங்கு மகளிர் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.மயானத்திலும், மயான பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானபாதை அமைத்து தர வேண்டும் .மேலும் மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும்.  மேலும்  ஏலாக்குறிச்சி புனித அடைக்கல மாதா திருத்தலம் முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு  மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : Communist ,bus station ,Ela Kachi ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு