×

மீனவர் வலையில் சிக்கிய கடல்பசு மீட்பு

அறந்தாங்கி, மார்ச் 14: மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல்பசுவை மீட்டு கடலில் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த புதுக்குடியில் உள்ள உப்பளம் அருகே 2 கடற்பசு மீனவர்கள் வலையில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி, வனத்துறை அலுவலர் முத்துராமன் மற்றும் பட்டுக்கோட்டை ஓம்கார் நிறுவன இயக்குனர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் 7 அடி நீளமுள்ள கடல்பசு உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. 10 அடி நீளமுள்ள கடல்பசு இறந்துவிட்டது. இதையடுத்து இறந்த நிலையில் உள்ள கடல்பசு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...