×

கீழ்வேளூர் அருகே தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் செயின் பறிப்பு

கீழ்வேளூர், மார்ச் 14: கீழ்வேளூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருமணாங்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்  மனைவி கவிதா (30) இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  வீட்டின் பின்பக்கம் இருந்த இரண்டு கிரில் கேட் பூட்டை உடைத்துக் கொண்டு கொள்ளை புற கதவையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள்  கவிதா கழுத்தில் அணிதிருந்த 8 பவுன் தங்க தாலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். உடன் விழித்துக்கொண்ட கவிதா சத்தம் போட அருகில் இருந்த கணவர் கொள்ளையர்களை துரத்தி சென்றார். ஆனால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kilaveloor ,
× RELATED கீழ்வேளூர் அருகே சுவரில் பைக் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி