×

தேர்தல் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, மார்ச் 14: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் பெயர் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை நாடாளுமன்றம், தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் பணியாளர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 230104 தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : Ex-servicemen ,election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...