×

திருப்புத்தூர் அருகே கருப்பூர் அரசுப்பள்ளிக்கு கல்வி சீருடன் ரூ.50 ஆயிரம் நிதி கிராமத்தினர் வழங்கினர்

திருப்புத்தூர், மார்ச் 12:  சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேற்று கல்வி சீர் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் கிராமத்தினர் வழங்கினர். திருப்புத்தூர் அருகேயுள்ள கருப்பூர் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்குவது என முடிவெடுத்து பள்ளிக்குத்தேவையான கல்வி உபகரணங்கள் பீரோ, குடிநீர் குடம், மின்விசிறி மற்றும் தளவாடச் சாமான்கள் முதலியவற்றை ஒருங்கிணைத்து ஊர் மந்தையிலிருந்து பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர், ஆசிரியர் குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சந்திரன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து இப்பள்ளி 7 முறை புத்தாக்க அறிவியல் திறன் பயிற்சியில் மாநில விருது பெற்றமைக்கும், தேசிய அளவில் 2017-18ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ் பெற்றமைக்கும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானி மற்றும் அப்துல்கலாம் விருது பெற்றமைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்வி சீருடன் பள்ளியின் தரைதள வசதியை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் பொதுமக்களால் வழங்கப்பட்டது.
அறிவியல் ஆசிரியர் ஸ்டீஃபன் நன்றி கூறினார். படவிளக்கம்திருப்புத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை கிராமத்தினர் வழங்கினர்.

Tags : government school ,Tiruputhur ,Karupur ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...