×

பணகுடி அருகே தோட்டத்தில் தேன்கூடுகளை உடைத்த மர்ம நபருக்கு வலை

பணகுடி, மார்ச் 12:  பணகுடி அருகே தோட்டத்தில் தேன்கூடுகளை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை  மாவட்டம், பணகுடி அடுத்த ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்த தர்மதுரை மகன் அஜித்குமார் (23). இவர் தனது தோட்டத்தில் ரூ.2 லட்சம் செலவுசெய்து 40  தேன்கூடுகள் அமைத்து தேனிக்கள் வளர்த்து வந்தார். இன்னும் 10 நாட்களில் தேன் எடுக்கும் பக்குவத்தில் இருந்த நிலையில் நேற்று  முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் அத்துமீறி புகுந்த மர்மநபர்கள், இங்கிருந்த தேன்கூடுகளை உடைத்தகோடு  தேனீக்களுக்கு தீ வைத்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்து தெரியவந்த அஜித்குமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிஹர பிரசாத் தலைமையில் பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று காலை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : garden ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணம் குறைப்பு