நெல்லை, மார்ச் 12: வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
துவக்க விழாவுக்கு தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தாக். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் ஆசிரியர் குமரகுருபரன், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வக்கீல் சங்கை கணேசன் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து என்எஸ்எஸ் மாணவர்கள் களப்பணியைத் துவங்கினர். ஏற்பாடுகளை எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி என்எஸ்எஸ் அலுவலர் குருபிரசாத் செய்திருந்தார்.