×

கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

க.பரமத்தி, மார்ச் 8:சிகப்பு எள் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.20 குறைவாக ஏலம் போனதால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். கடந்த திங்கள்கிழமை 56 மூட்டைகளில் 4059 கிலோ எடைக்காக நடந்த ஏலத்தில் சிவப்பு எள் குறைந்த விலையாக கிலோ ரூ.102க்கும், அதிக பட்சமாக ரூ.117 க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.20 குறைவாக ஏலம் போனது கருப்பு எள்ளுக்காக நடந்த ஏலத்தில் குறைந்த விலையாக கிலோ ரூ.113க்கும் அதிக பட்சம் ரூ.146க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.12 குறைவாக ஏலம் போனது. ஒரே வாரத்தில் கருப்பு மற்றும் சிவப்பு எள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால்
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Karur ,district farmers ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...