×

நீடாமங்கலம் பகுதியில் கோடை நெல் சாகுபடி மும்முரம்

நீடாமங்கலம், பிப்.8: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் கோடை நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் மின் மோட்டாரை பயன்படுத்தி  நிலத்தடி நீரில் சம்பா மற்றும் தாளடி நடவு செய்து, அதனை இயந்திரங்களில்  அறுவடை செய்யும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில்  முன்கூட்டியே சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்த காளாச்சேரி, மேலபூவனூர்,  சித்தமல்லி, கோயில்வெண்ணி, நகர், ஆதனூர், ராயபுரம், பெரம்பூர், அனுமந்தபுரம்  உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் வயல்களில் நடவு பணிக்கு  தொழிலாளர்கள் நாற்றங்காலில் நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். கோடை நடவு பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : area ,Neemamangalam ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது