×

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் வங்கி ஊழியர் மீது எஸ்பியிடம் புகார்

கடலூர், மார்ச் 8: மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் பார்வையற்றோர் சங்க தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் தக்ஷிணாமூர்த்தி பாலமுருகன், தில்லைநாயகம், வலசை அமரேசன் உள்ளிட்டோர் கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணனிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன்(58). கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2-3-19 அன்று எடச்சித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு, கடந்த ஆண்டு தான் வாங்கிய விவசாய கடனை புதுப்பிக்க சென்றார். அங்கிருந்த ஊழியர், ஜாமீனுக்கு இரண்டு நபர்களை அழைத்து வருமாறு கூறினார். அதன்படி அடுத்த நாள் இருவரை அமரேசன் அழைத்து சென்றார். அவர்களிடம் ஏன் மாற்றுத்திறனாளிக்கு ஜாமீன் போட வந்தீர்கள் என கூறி ஊனத்தை குறிப்பிட்டு இழிவாக பேசினார். இதனால் நியாயம் கேட்ட அமரேசனை வங்கி ஊழியர் தாக்கினார்.இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தனர். மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு எஸ்பி சரவணன் உத்தரவிட்டார்.

Tags : attack ,SPP ,
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...