×

மதுராந்தகம் பைபாஸ் சாலையில் உள்ள கோயிலை உடைத்து வெண்கல விநாயகர் சிலை திருட்டு

மதுராந்தகம், மார்ச் 8: மதுராந்தகம் பைபாஸ் சாலையில் உள்ள விநாயகர் கோயிலில் 2 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை மர்மநபர்கள் திருடி சென்றனர். அவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலை அருகே செல்வவிநாயகர் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது, கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த 2 அடி உயரம் கொண்ட வெண்கல விநாயகர் சிலையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Vinayagar ,theft ,road ,Madurantagam Bypass ,
× RELATED திருப்பாச்சேத்தி அருகே விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்