×

கல்லூரி மாணவி மாயம்

திருப்புத்தூர், மார்ச் 7:திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரத்தைச்சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் பிரியதர்ஷினி(19). இவர் திருப்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டில் இருந்த பெண்ணை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அரியலூரைச்சேர்ந்த மாணவர் திருப்புத்தூரில் இதே கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன் அவர், பெண்ணின் தாயாரிடம் பெண் கேட்டு போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் மாலை நாச்சியாபுரத்திற்கு ஒரு காரில் அவர், பிரியதர்ஷினியை அழைத்துசென்று இருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாகவும் பெண்ணின் தந்தை நாகராஜ் நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து நாச்சியாபுரம் எஸ்.ஐ.ராஜா நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்தது