×

திருப்புவனம் அருகே நெல் அறுவடை பணி தீவிரம்

திருப்புவனம், மார்ச் 7: திருப்பாசேத்தி பகுதியில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் இந்த ஆண்டு போதுமான மழையின்றி வறட்சியான நிலை நீடித்து வருகிறது. அத்துடன் வைகை ஆற்றில் போதுமான தண்ணீர் விடவில்லை. ஆனாலும் விவசாயிகள் மோட்டார் பம்ப் செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி சிரமப்பட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது நெல் விலையும் சரிந்து வருகிறது. எனவே, செலவு செய்த பணமாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

திருப்புவனத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.18 வீதம் ஓரளவு கட்டுபடியான விலை கிடைக்கிறது. ஆனால், ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய நிலையால் மூட்டை ஒன்றுக்கு 35 ரூபாய் பிடித்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தனியாரிடம் மூடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Tiruppannam ,
× RELATED திருப்புவனம் பகுதியில் அமைதியான வாக்குப் பதிவு