×

கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

தேன்கனிக்கோட்டை, மார்ச் 7:  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு அருகே உள்ள இருதுக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தலைவராக ஜெயபால் மற்றும் துணை தலைவராக பெருமாள் பதவி ஏற்றுக்கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜோதி, கவிதா, பத்மா, ஜெயப்பா, திம்மராஜ், கோவிந்தராஜ், ஜங்களராத்தியார், நாகராஜ், முனிராஜ் ஆகியோர் வங்கி செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கெலமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சையத் அசேன், அவைத்தலைவர் சீனிவாசன், கூட்டுறவு வீட்டுவசதி வங்கி தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக பதவி ஏற்று கொண்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Co-operative Bank ,Administrations ,
× RELATED நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு