×

குன்னுார் அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி

குன்னூர், மார்ச் 7:  குன்னுார் அருகே நான்ச்சச் பகுதியில் சிறுத்தை பகல் நேரத்திலேயே குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குன்னூர் அருகே உள்ள நான்ச்சச் பகுதியில் குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி கொண்டிருந்த சிறுத்தை மாட்டை தாக்கியது.   இதில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதற்குள் சிறுத்தை மாட்டை அடித்துக்கொன்றது. இதையடுத்து சிறுத்தை மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் யாரும் தனியாக வீட்டை விட்டு தேயிலை தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், தனியாக யாரும் தேயிலை பறிக்க வேண்டாம் என தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kunar ,
× RELATED குன்னூரில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு