×

ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு திருக்காரவாசலில் 39வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர்,மார்ச் 7: திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கண்டித்து நேற்று 39வது நாளாக  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம்  திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த ஜனவரி மாதம்  27ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் 39வது நாளாக இந்த போராட்டமானது போராட்ட குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.  இதில் போராட்ட குழு செயலாளர் சுப்பையன், பொருளாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...