×

பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க கோரி டிஎன்சிஎஸ்சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மார்ச் 7: பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடன் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நெல்மூட்டைகள் இயக்க செய்யப்படாத அவலநிலை நீடிப்பதால் தேவையான இடங்களில் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களை ஏற்படுத்தி நாள் ஒன்றுக்கு இரண்டு தவணையாக ரயில் தலைப்பு இயக்கத்தை அமல்படுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் எப்சிஐக்கு இணையான கூலி வழங்க வேண்டும். மேலும் அதனை உடனுக்குடன் அளித்திட வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடன் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து  மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி  டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்க  மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் வேலாயுதம் ஆகியோர்  பேசினர்.

Tags : DNSCCC ,layoffs ,
× RELATED டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுளில் 10,000 பேர் பணிநீக்கம்?