பெரம்பலூர்,மார்ச் 7: பொதுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முன் னாள் படைவீரர்கள் வருகிற 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : Food Corporation of India பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள்தேர்வு நடைபெறவுள்ளதால் அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் www.fci.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்த விவரத்தினை இணையதள விண்ணப்ப த்துடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்நல உதவிஇயக்குநர் அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 5ம்தேதிக்குள் நேரில் தெரிவித்துப் பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.