×

பராமரிப்பு பணியால் ரயில்கள் வருகையில் தாமதம்

மதுரை, மார்ச் 6: மதுரை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால் வைகை, குருவாயூர் உள்ளிட்ட 4 ரயில்கள் மதுரை ரயில் நிலையத்திற்கு, இன்று முதல் தாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மற்றும் திருச்சி ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இப்பகுதிகளிலிருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள், மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும். குறிப்பாக இன்று மற்றும் மார்ச் 9, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து, குருவாயூர் மற்றும் தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி எண்கள் 16127/16129) வழக்கத்தைவிட ஒன்றரை மணிநேரம் தாமதமாகவும், விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண் 56705) ஒரு மணி நேரம் தாமதமாகவும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில், அரை மணிநேரம் தாமதமாகவும் மதுரை ரயில் நிலையம் வந்து சேரும். இதேபோல் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16351) இன்றும் வரும் 13ம் தேதியும் 45 நிமிடங்கள் தாமதமாக மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : arrival ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...