×

மொபட்டில் இருந்து விழுந்த விவசாயி சாவு

செம்பட்டி, மார்ச் 6: நிலக்கோட்டை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார். நிலக்கோட்டை அருகே உள்ள ராஜதாணிகோட்டையை சேர்ந்தவர் வீரணன் மகன் பழனிச்சாமி(50). விவசாயி. இவர் தனது சொந்த வேலைக்காக மொபட்டில் நிலக்கோட்டை வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு நிலக்கோட்டை-மதுரை ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பழனிச்சாமி மகன் அசோக்குமார் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : Mobt ,
× RELATED மொபட்டில் இருந்து கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு