×

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வியாபாரிகள் கவலை

குன்னூர், மார்ச் 1: பொது தேர்வு இன்று முதல் முதல் துவங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று முதல் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியுள்ளதால் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிசோடி காணப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags : Travelers ,merchants ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...