×

புளுதியூர் சந்தையில் ரூ29 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், பிப்.28: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில் ரூ29 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை கூடுகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இதில், வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது.

மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ரூ22,400 முதல் ரூ48,500 வரையும், ஆடு ரூ4,100 முதல் ரூ8,200 வரையும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில், மொத்தம் ரூ29  லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Puliyathi ,
× RELATED புளுதியூர் சந்தையில் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை