×

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

சாத்தூர், பிப். 28: சாத்தூர் அருகே, டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். சாத்தூர் அருகே, மேட்டமலை கிராமத்தில் குடியிருப்பு அருகே, டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்னரே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டமலை கிராம மக்கள் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ரங்கநாதனிடம் நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்ற தாசில்தார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை