புதுக்கோட்டை,பிப்.28: இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்நாளில் பொதுமக்ளக் முறையிட்டனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட டிஆர்ஓ ராமசாமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். திருமயம் தாலுகா தலையனுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 17 குடும்பங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். தினசரி சம்பாதிப்பது எங்களின் குடும்ப செலவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எங்களுக்கு சொந்த நிலம் இல்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல முறை நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறோம். இதனால் எங்களின் துயறை போக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.