×

ஊதியூர் அருகே ரோட்டோரத்தில் பள்ளம்: வாகன ஓட்டிகள் பீதி

காங்கயம், பிப். 27: ஊதியூர் அருகே ரோட்டின் தார்மெட்டலை ஒட்டியிருக்கும் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.  காங்கயம் - தாராபுரம் ரோட்டில் ஊதியூருக்கும் குள்ளம்பாளையத்திற்கும் இடையேயுள்ள நாகரசு பிரிவு அருகே ரோட்டின் தார்சாலையை ஒட்டி சுமார் 1 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. அந்த பகுதியில் மேலும் சில இடங்களில் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளன. வழக்கமாக ரோடு போடும் போதே இதுபோன்ற பள்ளங்களை மண்போட்டு சமன் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால் அப்பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallam ,motorway ,motorists ,Udayur ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...