×

கேத்தி பாலாடாவில் ஓடையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

குன்னூர், பிப். 27: கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பலர் விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக கேத்தி பாலாடா பகுதியில் ஓடை உள்ளது. தற்போது வறட்சி நிலவுவதால் ஓடையில் நீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஓடையை தூர்வாரினால் மழைக்காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்க வசதியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kathi Balada ,
× RELATED கேத்தி பாலாடா பகுதியில் கனமழையால் பீட்ரூட் பயிர்கள் நீரில் மூழ்கின