×

சிறுபான்மை மக்களுக்கு போட்டியிட வாய்ப்பு ஏஐஎம்ஐஎம் செயற்குழுவில் வலியுறுத்தல்

ஓசூர், பிப்.27:  ஓசூரில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் இம்தியாஸ் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் அஜார், பொதுச்செயலாளர் அமீனுல்லா, பொருளாளர் ரியாஸ், செயலாளர் ஆசிப்  முன்னிலை வகித்தனர்.  அனைத்து சமுதாய மக்களும் பொது வாழ்வில் ஈடுபடும் வகையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமானால் அனைத்து  மக்களையும் ஒன்று திரட்டி ஆளும் வர்க்கத்திற்கு பாடம் புகட்டுவோம். இந்த முறை சிறுபான்மை மக்களுக்கு எந்த கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்றார்களோ அவர்களுக்கே கிருஷ்ணகிரி மாவட்ட ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் வாக்குகளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் நகர தலைவர் யுனஸ், பொருளாளர் இல்லு, இளைஞரணி இணை செயலாளர் மௌலா, தலைவர்  வாஜித், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் வாஜித்பாஷா, நகர இணை செயலாளர் இப்ராகீம், ஒன்றிய தலைவர் காதர்பாஷா, மாணவரணி மாவட்ட தலைவர் தபரஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி மாவட்ட தலைவர் தபரஷரிப் நன்றி கூறினார்.

Tags : executive committee ,Aimim ,
× RELATED கராத்தே அசோசியேசின் செயற்குழு கூட்டம்