×

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா துவக்கம் 20ம் தேதி பால்குடம்

காரைக்குடி, பிப். 27:காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா மிகவும் பிரசித்துபெற்றது. இக்கோயில் பால்குட விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஒரு மாதத்திற்கு விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.

மார்ச் 10ம் தேதி மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை, 12ம் தேதி காலை கணபதி பூஜை, காலை 5.28க்கு கொடியேற்றம், 6.57க்கு காப்புகட்டுதல் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் கரகம், மது, முளைப்பாரியும், 20ம் தேதி காலை 8 மணிக்கு காவடி, பூக்குழி, பால்குடம் நடக்கிறது. 21ம் தேதி இரவு 8.20க்கு காப்பு பெருக்குதல், இரவு அம்மன் வீதி உலாவும், 22ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

Tags : festival ,Muthuramaniyanam ,Karikudy Meenathipuram ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...