கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானல் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 35வது ஆண்டு விழா நடந்தது. இணை தாளாளர் ஜெசிகுரிய் தலைமை வகிக்க, முதல்வர் ஜெயா ஆர்தர் வரவேற்றார். தாளாளர் குரியன் ஆபிரகாம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ரோட்டரி சங்கம் கிருபா ஜோன்ஸ், நகர் பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை வேளாங்கண்ணி தொகுத்து வழங்க, உடற்கல்வி ஆசிரியர் இப்ராகிம் நன்றி கூறினார்.