×

நாட்றம்பள்ளி அருகே அரசு பள்ளியில் மாணவியுடன் ‘டிக்டாக்’ செய்த பிளஸ் 2 மாணவன் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

நாட்றம்பள்ளி, பிப்.26: நாட்றம்பள்ளி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவியுடன், மாணவன் சேர்ந்து நடித்த ‘டிக்டாக்’ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள பச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் பிளஸ் 2 மாணவர் ஒருவர், சக மாணவியுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் மாணவி வகுப்பறையில் உள்ள கரும்பலகை அருகே நிற்க அருகே மாணவன் நின்று கொண்டு ‘உன்னோட மடியில தலைய வச்சி, கழுத்துல போடணும் மூணு முடிச்சி, கல்யாண தேதிய குறிச்சி வைச்சி, நான் சுவாசிப்பது உந்தன் மூச்சி... என்ற காதல் பாடல் வரிகளுக்கு ஏற்ப ‘டிக்டாக்’ வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ‘டிக்டாக்’ வீடியோவால் பலர் பாதிக்கப்படுவதாகவும், கலாச்சாரம் சீரழிவதாகவும் அதனை தடை செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவி நடத்திய இந்த காட்சியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ‘இந்த செயலை, பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : student ,government school ,Nathurampalli ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா